செவ்வாய், 12 டிசம்பர், 2023

தொலைநோக்கு - ஆய்வு நூல்

 


அய்யனார் பதிப்பகம், எண் 32, இராமகிருஷ்ணாபுரம், 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை 600 088. 2010. கைபேசி 9789016815

பதிப்புரை

 

            நேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்ப-மனித வளத்தின் திறத்தால் நாளைய சமூக நலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்துச் செயலாக்கம் செய்ய முனைதலும் தொலைநோக்காகிறது. இவ்வகைச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட சமூகமே தன் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதோடு, பிற சமூகத்திற்கும் வழிகாட்டி, தலைமை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது.

 

            2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சமூக ஆர்வலர்களால் இன்று பரவலாக முன்மொழியப்படும் சொல்லே ‘தொலைநோக்குஎன்பது. இச்சொல்லே இந்நூலிற்கு வேராக அமைந்திருக்கிறது. அவ்வகையில் தொலைநோக்கு என்ற சொல்லிற்கான முழு வரையறையைக் கொடுத்து, இச்சிந்தனையை ஒரு இயக்கமாக மாற்ற முனைந்திருக்கிறார் ஆசிரியர்.

 

            இன்றைய-நாளைய சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குச் சிந்தனைகளிலிருந்து பெற்றவையே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது. ‘தொலைநோக்குஎன்ற கலைச்சொல் புதியதாக இருக்கலாம், ஆனால், தொலைநோக்குச் சிந்தனை பழந்தமிழரிடத்து மிகுந்திருந்ததென்பதைப் பழந்தமிழ் இலக்கிய-இலக்கணச் சான்றுகளின் வழி நிறுவியிருப்பது சிறப்பு. கருத்துருவாக்கத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால நடப்பியல் வரையிலாக முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆசிரியரின் வாசிப்பனுபவத்திற்கும், தேடலுக்கும் சான்று பகர்கின்றன.

 

            முனைவர் ஆ. மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆராய்ச்சியாளராகப்  பணியாற்றியவர். படவிளக்க அகராதி, தமிழ்மொழிக் கையேடு,  உயிரோவியம் - சங்க இலக்கியத்தில் தமிழர், தமிழ் மின் அகராதி, தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் சிந்தனைகள் போன்ற  கணினித் தமிழ் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் தமிழ் அறிஞர்விருதினைப் பெற்றவர். தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மைஎன்ற இரண்டும் இவரின் முந்தைய ஆய்வு நூல்கள். அவ்வகையில், இக்கால சமூகத் தொலைநோக்கின் தேவை, நிறைவு-நிறைவின்மையையும் பழந்தமிழர் சமூகத் தொலைநோக்குச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் ‘தொலைநோக்குஎன்ற இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.                                                                          

அய்யனார் பதிப்பகம்

 

                                                         

                                                          முன்னுரை

  

            ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள் போன்றவற்றால் பிற சமூகங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமூகத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன. மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது  திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில், பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகங்களாக விளங்குபவை பழந்தமிழ் நூல்களாகும். இவை, பழந்தமிழரின் பல்வகைக் கூறுகளைத் தம்முள் அடைகாப்பது போலவே, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தம்முள் கொண்டுள்ளன.

             மேலும், வரலாற்று ஆய்விற்கும், சமூக ஆய்விற்குமான தேடலில், இலக்கியப் பதிவுகள் என்பதும் முதன்மைச் சான்றுகளாக அமைக¤ன்றன. இலக்கியம் காலத்தின் பதிவாகவும்  கண்ணாடியாகவும் சுட்டப்படுகின்றது. அவ்வகையில், பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு, அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனைகள் வெளிக் கொணரப்படுவதை முதன்மை நோக்காகவும், இன்றைக்கும் நாளைக்குமான தொலைநோக்குத் திட்ட வரையறையை மதிப்பீடு செய்வதை துணைமை நோக்காகவும் கொண்டு இந்நூலுள் அமைகிறது.

         இன்றைக்கும் எதிர்காலத்துக்குமான சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்களுக்கான அடிப்படை  முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளுமே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் காலத்தின் தேவையாகிறது.

             காட்டாற்றுக் கூழாங்கற்கள், கூழாங் கற்களாகவே பிறப்பதில்லை. அவ்வடிவத்தைப் பெற அவை கடந்துவந்த பாதைகளும், காலமும் பலவாகும். கற்களின் சிதைவுகள் காலத்தின் பதிவுகளாகின்றன. சமூகத்தின் இன்றைய ஒழுங்குமுறை கட்டமைப்பும், ஓட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கூழாங்கற்களைப் போன்றதே. எனவே, சமூகத்தைத் தொலைநோக்குத் திட்டம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல, அது கடந்து வந்த பாதையை, தம் வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்றுக்கொண்ட மாற்றங்களை, மீள் ஆய்விற்கு உட்படுத்தி, ஏற்புடையனவற்றைக் கொள்ளலும், அல்லாதனவற்றைத் தள்ளலும்  இன்றியமையாததாகிறது. திட்டச் செயலாக்கத்தில் இடைப்படும் தடைகளை எதிர்கொள்ள, எளிதில் அத் தடைகளிலிருந்து விடுபட, இவ்வணுகுமுறைத் தேவையாகிறது. ஒரே வகையிலான வழக்கில் முன்னைத் தீர்ப்புகளைப் புரட்டிப் பார்த்தலும், ஒரே தன்மையிலான நோய்க்கு முன்பு வழங்கப்பட்ட மருந்து முறைகளை  ஆய்வதும் போன்றதாகும் இது.

             மேலும், ஒரு சமூகம் தன்னிறைவு பெற்ற, பலம் பொருந்திய சமூகம்  என்ற நிலையை அடைவதென்பது அது தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும், எதிர்கொண்ட சவால்களையும் அடித்தளமாகக் கொண்டு முன்னேறுவதைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தொலைநோக்குத் திட்ட கருத்துருவாக்கம் பரவலாக்கப்பட்டுவரும் இன்றைய சூழல் இப்பார்வையின் தேவையை வலுவாக்குகிறது.

             இலக்கண நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும், பதினெண்கீழ்க்கணக்கு  நூலான திருக்குறளும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் இந்த நூலிற்கு ஆய்வுக் களங்களாக அமைகின்றன. ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007) என்ற என் முந்தைய நூல்களை வரவேற்று,  நிறை-குறைகளைச் சுட்டி என்னை ஆற்றுப்படுத்திய தமிழ்ச்சான்றோர்கள், தமிழன்பர்கள் இந்நூலினையும் ஏற்பார்களென நம்புகிறேன்.                                     

                                                                                                                                     நட்புடன்

 ஆ. மணவழகன்

நூல்கள் பெற

9789016815


வெள்ளி, 26 நவம்பர், 2021

தில்லி பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

தில்லி பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
University of Delhi
Tamil Ph.D. Thesis 

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

நன்றி: முனைவர் இர.பூந்துறயான். 23.07.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

மீரா,ஆண்டாள் பாடல் ஒப்பாய்வு 

மீனாசக்சேனா 

சாலை இளந்திரையன், விமலா குப்தா

1969 

2

திருவள்ளுவரும் கம்பரும் -  ஒப்பியலாய்வு 

இரவீந்தரகுமார். சேத் 

ஆறுமுகம். க ஒம்பிரகாசு

1971 

3

பழந்தமிழ் இலக்கியத்தில் பெண்மை 

இந்திராணி மணியன் 

ஆறுமுகம். க

1978 

4

7 - 9 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் வைணவம் 

பார்த்தசாரதி(இந்திரா பார்த்தசாரதி) 

ஆறுமுகம். க

1979 

5

கி.பி.600 - கி.பி.1300 காலகட்ட தஞ்சை மாவட்ட இடப்பெயர்கள் ஆய்வு 

பரமசிவம். த.கோ 

ஆறுமுகம். க

1981 

6

தமிழ் புதினம்களில் (1952-1976) சோசலிச எதார்த்தவாதம் -  

மாரியப்பன். அ 

சாலை இளந்திரையன்  

1981 

7

தமிழ் இலக்கியம் மற்றும் மரபில் முருகன் பற்றிய தொன்மங்கள் -  

உசா செகதீசன் 

இரவீந்திரன். செ

1985 

8

பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாகும் நெய்தல் நில மக்கள் வாழ்க்கை 

செந்தாமரை 

பாலசுப்பிரமணியன். பா  

1989 

9

சங்க இலக்கியத்தில் காணலாகும் அறக்கோட்பாடும் சமூக வாழ்வும் 

மாணிக்கவாசகம் 

பாலசுப்பிரமணியன். பா

1989 

10

தமிழ்ப் புதுக்கவிதைகள் (1959-1983) ஒரு திறனாய்வு 

சுப்பிரமணியன். வி 

இரவீந்திரன். செ

1990 

11

தற்காலத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் நனவோடை உத்தி 

செயாபுரி 

பாலசுப்பிரமணியன். பா  

1992 

12

தமிழ் இலக்கியத்தில் - குறிப்பாக கி.ராசநாராயணன் படைப்புகளில் வட்டார இலக்கியப் போக்குகள் 

விசயலட்சுமி ராசாராம் 

பாலசுப்பிரமணியன். பா  

1992 

13

பொன்னீலன் படைப்புகள் -  

விசயலட்சுமி தங்கவேல் 

பாலசுப்பிரமணியன். பா  

1995 

14

தமிழில் சேக்சுபியர் நாடகங்களின் மொழிபெயர்ப்பும் தழுவலும்

அருள். ந 

பாலசுப்பிரமணியன். பா  

1997 

15

பள்ளு இலக்கியத்தின் சமூகக் கூறுகள் 

அகிலாசிவசங்கர் 

மாரியப்பன். அ  

2002 

16

நவீனத் தமிழ் நாடகங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம்(1971-2000) 

ஆனந்தி. வி 

இரவீந்திரன். செ

2005 

17

நவீனத் தமிழ் இலக்கியத்தில் (1986-1947) ஒடுக்கப்பட்டோர் சித்தரிப்பு 

வெங்கடேசன். ம 

இராசகோபால். கோவி

2005 

18

தமிழ் தலித் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 

குணசேகரன். சுப 

இராசகோபால். கோவி

2007 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

கற்பகம் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

கற்பகம் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Karpagam University
Tamil Ph.D. Thesis 

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1.

ஒப்பியல் நோக்கில் வள்ளுவரும் பர்துருஹரியாரும்

மாலதி, சீ

ச. கவிதா

2016

 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
 University of Jaffna
Tamil Ph.D. Thesis 

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

நன்றி: முனைவர் இர.பூந்துறயான். 23.07.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

மட்டக்களப்பு மரபுவழி நாடக அரங்கு 

மௌனகுரு. சி 

சிவத்தம்பி. கா

1984 

2

தமிழ்ப்பா வடிவங்களின் வளர்ச்சி (சோழர் காலம்) 

சுப்பரமணியம். நா 

வித்தியானந்தன். சு  சண்முகதாசு. அ  

1985 

3

தமிழாய்வுக்கு ஈழத் தமிழர் பங்களிப்பு நூல் அட்டவணையுடன் ஆய்வு 

பாக்கியநாதன். வே.இ 

கைலாசபதி. க  சண்முகதாசு. அ

1985 

4

இலங்கை வட்டுக்கோட்டை செமினரியும் தமிழ்ச்சிந்தனை வளர்ச்சியும் 

செபநேசன் 

சிவத்தம்பி. கா

1987 

5

வட இலங்கை நாட்டார் அரங்கு 

சுந்தரம்பிள்ளை 

கைலாசபதி. க,சண்முகதாசு. அ  

1991 

6

கிறிசுதவம் வருதற்கு முன்னும்பின்னும் தமிழ்ப் பெண்களின் நிலை - தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக் கொண்ட ஆய்வு 

செல்வி செல்வபூர்ணம் விமலாதேவி செல்லையா 

சண்முகதாசு. அ  

1995 

7

ஈழத்துத் தமிழ் உரை மரபு 

சிவலிங்கராசா 

சண்முகதாசு. அ

1997 

8

சங்க அகப்பாடல்களுக்கான உரைப்பொருத்தப்பாடு - குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு 

மனோன்மணி சண்முகதாசு 

சிவத்தம்பி. கா  

1997 

9

ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தோற்றம் 1985 வரை அதன் வளர்ச்சி 

யோகராசா. செ 

சிவத்தம்பி. கா

1999 

10

சங்க இலக்கியத்தில் திணைக் கோட்பாடு அதன் சமூக இலக்கிய முக்கியத்துவம் 

அம்மன்கிளி முருகதாசு

சிவத்தம்பி. கா

2000 

11

ஈழத்துத் தமிழ் புதினம்களில் சமூகச் சிக்கல்கள் 

இரகுநாதன். ம 

சிவத்தம்பி. கா

2001 

12

அறிவியல் தமிழ்: அதன் பண்பும் பயனும் 

செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் 

சண்முகதாசு. அ

2002 

13

டானியலின் எழுத்துக்கள் 

திருநாவுக்கரசு. செ 

சண்முகதாசு. அ  

2002 

14

நாலாயிரத்திவ்யப் பிரபந்த்த்தில் நாட்டார் மரபுகள் 

சிவலிங்கம் சிவநிருத்தானந்தா 

சண்முகதாசு. அ  

2006 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.