வியாழன், 19 மே, 2011

கலைஞரிடம் விருதுத் தொகை பெற்ற முனைவர் ஆ.மணவழகன்


கலைஞரிடம் விருதுத் தொகை பெறும் முனைவர் ஆ.மணவழகன்

           செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

     நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வறிஞர்’  விருது முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

            இந்த விருதானது சான்றிதழோடு, ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியது.  28.03.2010 அன்று சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசு அறிவித்த செம்மொழித் தமிழின் இளம் அறிஞர் விருதுத்கான தொகை ரூபாய் ஒருலட்சத்தை, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி சிறப்புசெய்தார். படத்தில், முதல்வர் அவர்களிடமிருந்து காசோலை பெரும் ஆய்வறிஞர் முனைவர் . மணவழகன் அவர்கள்.

 

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது


    செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

       நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர் விருதினை முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பெற்றார். இவ்விருதை, 06.05.2011 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் வழங்கினார்.