திங்கள், 4 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 3


முரண்

பூச்சூடி
பொட்டு வைத்து
ஆடை உடுத்தி
அலங்காரம் செய்த
அழகு பொம்மையோடு
அம்மணக் குழந்தை
எங்கள் தேசம்


வெள்ள நிவாரணம்

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல
மனிதப் போலி

பலப்பல முகங்கள்
பலப்பல நிறங்கள்
உலக நாகரிகத்தை
உடலில் சுமக்கும் அதிசயங்கள்
பார்த்தால் பேசினால்
அனைவரும் மனிதரே
பழகிப்பார்
பத்தில் ஒன்பது பதர்கள்

 மாக்கள்
 வைக்கோல் கன்றுக்கு
மடிசுரக்கும் பசு
கட்சித் தொண்டன் 

அதிசயம்

ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
ஒற்றைச் சித்தனின் உயிர்த்தவம்
தூக்கணாங்கூடு
சிறுமை

பிழைப்பில் கூடியது எறும்பு
இறப்பில் கூடியது மனிதம்
ஆறறிவுச் சிறுமை


ஒட்டடை
ஐயோ
துடைத்து விடாதே
ஒட்டடை அல்ல வீடு
சுவரில் சிலந்தி

ஐயோ பாவம்

நடுங்கி இருக்குமோ குளிரில்
புல்லின் நுனியில்
பனித்துளி
சுவடுகள்

நீ நடக்கும் பாதைகளில்
உன் பாதச்சுவடுகளைப்
பாதுகாத்து வை
உன் மரணம்
சாதனையாகும் பொழுது
அதுவும்
சரித்திரமாகும்




கருத்துகள் இல்லை: