வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வித் திருவிழா




           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 2013 முழுவதும் கல்வியியல் தொடர் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. பிப்ரவரித் திங்கள் தொடர் நிகழ்வுகளில், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஒன்பது; மூன்று நாள் பயிலரங்குகள் இரண்டு; ஐந்து நாள் பயிலரங்கு ஒன்று; தேசியக் கருத்தரங்கு ஒன்று; கலை நிகழ்ச்சிகள்; மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. சிறப்பாக, உலகத் தாய்மொழித் தினமான பிப்ரவரி 21 அன்று, அறக்கட்டளைச் சொற்பொழிவு, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை,கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக முதல்வரின் பிறந்தநாளான பிப்.24அன்று நிறுவன வளாகத்தில் 65 பழமரக்கன்றுகள் நடும் விழா, சிற்றுண்டி நிலையம் திறப்பு விழா போன்றவை நடைபெற்றன.




தொடக்க விழா

        2013 பிப்ரவரி திங்கள் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தேசியக் கருத்தரங்குகள், தேசியப் பயிலரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக 01.02.2013 அன்று மாலை 03.00 மணியளவில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப., அவர்கள் பிப்ரவரித் திங்களுக்கான நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். கவிஞர் கலைமாமணி திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களும், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத் தனி அலுவலர் திரு தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றியுரை கூறினார்.
வரவேற்புரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல்,கலை(ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன்

தலைமையுரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்

தொடக்கவுரை:தமிழ்வளர்ச்சிஅறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம்

வாழ்த்துரை: கலைமாமணி ஏர்வாடி திரு இராதாகிருட்டிணன்


வாழ்த்துரை:அரசுமொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

நன்றியுரை :உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தனி அலுவலர் திரு மார்ட்டின்