வியாழன், 19 மே, 2011

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது


    செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

       நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர் விருதினை முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பெற்றார். இவ்விருதை, 06.05.2011 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் வழங்கினார். 


கருத்துகள் இல்லை: