புதன், 7 மார்ச், 2018

பழந்தமிழக மகளிர் வீரம் - ஆ.மணவழகன்



விதைத்தலும் அறுவடை செய்தலும் வீரத்திற்கும் பொருந்தும். வீரத்தையும் மண் பற்றையும் விதைப்பதில் பெண்களே கைதேர்ந்த உழவர்கள். சங்க இலக்கியத் தாயொருத்தியின் மற உணர்வையும் மண் பற்றையும் பெண்பாற் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நயம்பட உரைக்கிறார்.

‘முன்நாள் நடந்த போரில், இவளுடைய தந்தை போர்க்களத்தில் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான். நேற்று நடந்த போரில், இவளுடைய கணவன் பகைவர்கள் பெரும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லாமல் தடுத்துநின்று போரிட்டு வீரமரணமடைந்தான். இன்றும் போருக்கு எழுமாறு வீரரை அழைக்கும் முரசின் ஒலி கேட்கிறது. இவளோ அறிவு மயங்கி, உறவென்று தனக்கிருக்கும் ஒரே மகனையும் போர்க்கோலம் பூணச்செய்து, கையிலே வேலைக்கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இவள் துணிவு கொடியது. இந்தக் கொடிய முடிவினை எடுத்த இவளது சிந்தை கெடுக!

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
------- ------------------- ---------------
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! (புறம்.279)


- முனைவர் ஆ.மணவழகன்