புதன், 28 ஜூன், 2017

பழந்தமிழர் நீதி

நீதி வேண்டுவோர், தன் வயது குறைவு காரணமாக தான் வழங்கும் நீதியைக் குறைவாக எண்ணிவிடக் கூடதென்று ‘முதியவர் வேடமணிந்து’ நீதி வழங்கிய கரிகாலன்!


தன் மகன் அறியாது செய்த பிழைக்காக அவனைத் ‘தேர்க்காலிலிட்ட’ மனுநீதிச் சோழன்!


நீதிமுறைமை மாறிவிடக் கூடாதென்பதற்காக அறியாது செய்த சிறு பிழைக்கும் ‘தன் கையையே வெட்டிக்கொண்ட’ பொற்கைப் பாண்டியன்!


அடைக்கலம் வந்த புறாவிற்காக ‘தன் தசையையே அறுத்துக்கொடுத்த’ சிபி!


- இவை வரலாறோ, புனைவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவர்களின் செயல்கள் உலகிற்கு உணர்த்துவது இதைத்தான்: நீதிக்காக உணர்வு, உறுப்பு, உடல், உறவு, உயிர் அனைத்தையும் இழக்கலாம். ஆனால் நீதியை மட்டும் எதன்பொருட்டும் இழக்கக் கூடாது.
-முனைவர் ஆ.மணவழகன்